×

வாணியம்பாடி அரசியல் பிரமுகர் கொலை வழக்கில் கஞ்சா வியாபாரிகள் உட்பட 7 பேர் கோர்ட்டில் சரண்: கஸ்டடியில் எடுக்க போலீசார் முடிவு

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கடந்த 10ம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் கூலிப்படையால் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அன்றிரவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையின்போது ஓட்டேரி வண்டலூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்கிற ரவி மற்றும் டில்லிகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு துப்பு கொடுத்ததால் வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலையில் முக்கிய குற்றவாளிகளான டீல் இம்தியாஸ், கார் டிரைவர் உட்பட மேலும் 10 பேரை தேட தொடங்கினர். இந்நிலையில் வசீம் அக்ரம் கொலை வழக்கில் செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த அகஸ்டின், முனீஸ்வரன், ஓட்டேரி வண்டலூரை சேர்ந்த பிரவீன்குமார், அஜய், செல்வா என்கின்ற செல்வகுமார், ஊரப்பாக்கத்தை சேர்ந்த சத்தியசீலன் ஆகிய 6 பேர் தஞ்சாவூர் ஜேஎம் 3வது நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி பாரதி முன்பு சரணடைந்தனர். இதையடுத்து அவர்களை வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் கோவை கோர்ட்டில் அடைக்கப்பட்டனர். அதேபோல் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் நேற்று சிவகாசி ஜேஎம்1 கோர்ட்டில் சரணடைந்தார். தொடர்ந்து மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் நீதிமன்றங்களில் சரணடைந்தவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post வாணியம்பாடி அரசியல் பிரமுகர் கொலை வழக்கில் கஞ்சா வியாபாரிகள் உட்பட 7 பேர் கோர்ட்டில் சரண்: கஸ்டடியில் எடுக்க போலீசார் முடிவு appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,Vaniyampadi ,Vaniyampadi, Tirupathur district ,Human Democratic Party ,Waseem Akram ,Dinakaran ,
× RELATED வாணியம்பாடியில் கேன்டீன் ஊழியரை...